02nd April 2023 22:03:57 Hours
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் உதவி பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன் கேணல் புனித் சுசில் வட மாகாணத்திற்கான விஜயத்தின் போது வெள்ளிக்கிழமை (31) முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு விஜயம் செய்தார்.
விஜயம் மேற்கொண்ட லெப்டினன் கேணல் புனித் சுசில் அவர்களை முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன விஜேசேகர மற்றும் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக பிரிகேடியர் பொதுப்பணி ஆகியோர் அன்புடன் வரவேற்றனர்.
இந்த சந்திப்பின் போது, பாதுகாப்பு, சமூக மேம்பாடு, சிவில்-இராணுவ ஒத்துழைப்பு, சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகத்தைத் தடுப்பது போன்றவற்றில் கவனம் செலுத்தி முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பன்முகப்படுத்தப்பட்ட பாத்திரங்கள் குறித்து அவர்கள் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.
சுமுகமான சந்திப்பின் முடிவில், நினைவுச் சின்னங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டதுடன் வருகை தந்த உதவி பாதுகாப்பு ஆலோசகர் விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் தனது எண்ணங்களை பதிவிட்டார்.