04th April 2023 17:30:32 Hours
இராணுவத்தால் நிர்வகிக்கப்படும் ரிதியகம மற்றும் இரணைமடு பண்ணைகளில் தற்போது 20 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பில் பொரும்போக நெல் அறுவடை மற்றும் ஏனைய பருவகால பயிர்களின் அறுவடை பணியில் படையினர் ஈடுபட்டு வருவதாக அந்த பண்ணைகளை நடத்துவதற்கு பொறுப்பான இலங்கை இராணுவ விவசாய மற்றும் கால்நடை படையணி தெரிவித்துள்ளது.
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் பசுமை விவசாய வழிநடத்தல் குழுவை நிறுவியதன் பின்னர் இராணுவத்தில் உணவுப் பாதுகாப்புத் திட்டம் ஒரு ஊக்கத்தைப் பெற்றது.
இராணுவப் பண்ணைகளில் இருந்து அறுவடை செய்யப்படும் அறுவடைகள் இராணுவ வீரர்களின் நுகர்வுக்காக வழங்கப்படுகின்றதுடன் மிகுதியானவை பொதுமக்களுக்கு மானிய விலையில் விற்கப்படுகின்றன.