15th April 2023 07:57:34 Hours
கெமுனு ஹேவா படையணியின் ஓய்வுபெறும் பிரிகேடியர் பீடிஏஜி சேனாதீர யூஎஸ்பீ மற்றும் பிரிகேடியர் எம்கேஎஸ்எஸ்பீ ஜெயசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ ஆகியோருக்கு 08 ஏப்ரல் 2023 அன்று கெமுனு ஹேவா படையணி தலைமையகத்தில் பிரியா விடை மரியாதை வழங்கப்பட்டது. அவர்கள் இருவரும் இலங்கை இராணுவத்தில் 33 வருடங்களுக்கும் மேலாக வெற்றிகரமான சேவையை முடித்து விரைவில் ஓய்வு பெற இருக்கின்றனர்.
படையணி தலைமையகத்தில் இரு பிரதம விருந்தினர்களையும் வரவேற்றதுடன் அவர்களுக்கு நுழைவாயிலில் தனித்தனியாக பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதைகள் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து, வீரமரணம் அடைந்த வீரர்களின் நினைவுத் தூபிக்கு சம்பிரதாய நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
மேலும் கெமுனு ஹேவா படையணியின் படையினர் ஓய்வு பெறும் சிரேஷ்ட அதிகாரிகள் இருவருக்கும் தனித்தனியான இராணுவ அணிவகுப்பு மரியாதையையும் வழங்கினர். அதைத் தொடர்ந்து, கெமுனு ஹேவா படையணி தலைமையக அதிகாரிகளின் உணவகத்தில் முறையான பிரியாவிடை இரவு உணவும் வழங்கப்பட்டது.
09 ஏப்ரல் 2023 அன்று, அவர்களது வாகனம் வளாகத்தை விட்டு வெளியே செல்லத் தொடங்கியபோது, அதிகாரிகளும் சிப்பாய்களும் வீதி வரிசையில் அவர்களுக்கு பிரியாவிடை அளித்தனர்.
கெமுனு ஹேவா படையணியின் சிரேஷ்ட அதிகாரிகள் வெளியேறும் நிமிடத்தில் அனைத்து அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு தங்களது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர். அவர்கள் ஆரோக்கியமான, செல்வச் செழிப்பான, அமைதியான, வளமான வாழ்க்கை வாழ வாழ்த்தப்பட்டனர்.