15th April 2023 08:03:04 Hours
வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 21 வது காலாட் படைப்பிரிவின் புதிய தளபதியாக இலங்கை சிங்கப் படையணியின் மேஜர் ஜெனரல் டபிள்யூபீஏடிடபிள்யூ நாணயக்கார ஆர்எஸ்பீ விஎஸ்வி யூஎஸ்பீ என்டியூ அவர்கள் மத ஆசீர்வாதங்கள் மற்றும் சம்பிரதாயங்களுக்கு மத்தியில் அனுராதபுரம், ரணசெவபுர படைப்பிரிவு தலைமையகத்தில் 22 மார்ச் 2023 அன்று பதவியேற்றார்.
புதிய தளபதியை, பிரிகேட் தளபதிகள் மற்றும் பணிநிலை அதிகாரிகளால் மரியாதையுடன் வரவேற்கப்பட்டதுடன், இராணுவ மரபுகளுக்கு இணங்க பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் இராணுவ அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.
அதன்பிறகு, 'செத் பிரித்' பாராயணங்களுக்கு மத்தியில் தனது கடமைகளை ஏற்றுக்கொண்டதைக் குறிக்கும் வகையில் அதிகாரப்பூர்வ ஆவணத்தில் கையெழுத்திட புதிய தளபதி அழைக்கப்பட்டார்.
அன்றைய நிகழ்ச்சியில் மரக்கன்று நடுதல், படைப்பிரிவு தலைமையகத்தின் படையினருக்கு உரையாற்றுதல் மற்றும் அனைத்து நிலையினருடன் தேநீர் விருந்துபசாரத்திலும் தளபதி கலந்து கொண்டார்.
படையினருக்கு ஆற்றிய உரையின் போது, போர் மற்றும் சமாதான காலத்தின் போது இலங்கை இராணுவம் மேற்கொண்ட தனித்துவமான முயற்சிகள் மற்றும் உயர் தரமான இராணுவ ஒழுக்கத்தை பேணுவதற்கு அனைத்து நிலையினரின் அர்ப்பணிப்பின் முக்கியத்துவத்தை தளபதி வலியுறுத்தினார்.
அன்றைய நிகழ்வின் போது 21 வது காலாட் படைப்பிரிவின் கீழ் உள்ள பிரிகேட் தளபதிகள், கட்டளை அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.