19th April 2023 20:20:14 Hours
செவ்வாய்க்கிழமை (18) பிற்பகல் பூஸ்ஸ புகையிரத நிலையத்தில் ரயிலில் ஏறிக் கொண்டிருந்த பெண் பயணி ஒருவரிடமிருந்து தங்க நகையைப் பறித்துச் சென்ற திருடனை பூஸ்ஸ 61 வது காலாட் படைபிரிவு தலைமையகத்தில் பணியாற்றும் பொறியியல் நிலையத்தின் இராணுவ சிப்பாய் ஒருவர் துரிதமாகச் செயல்பட்டு மடக்கிப் பிடித்துள்ளார்.
பூசாவில் உள்ள 61 வது காலாட் படைபிரிவு தலைமையகத்தில் பணியாற்றும் சிப்பாய் ஆர் ஜி டி குமார அவர்கள் ரயில் நிலையத்தில் இருந்தபோது, நிலையத்தில் நிறுத்தப்பட்ட ரயில் முன்னோக்கி நகரும் போது இந்த சம்பவம் நிகழ்ந்தது.
2 பவுன் அட்டியல் நகையை திருடன் எடுத்துக்கொண்டு ரயில் தண்டவாளத்தில் ஓடியதை தொடர்ந்து பாதிக்கப்பட்ட நபர் ரயிலில் ஏறாது உதவிக்காக கூச்சலிட்ட போது இச் சம்பவம் இடம் பெற்றது.
சிப்பாய் ஆர்ஜிடி குமார என்பவர் திருடனை துரத்திச் சென்று நகையுடன் மடக்கிப் பிடித்தார். சில நிமிடங்களுக்குப் பிறகு, நகையுடன் திருடனை சம்பவ இடத்தில் மேலதிக விசாரணைக்காக ரத்கம பொலிஸ் நிலைய பொலிஸாரிடம் ஒப்படைத்தார்.