Header

Sri Lanka Army

Defender of the Nation

04th May 2023 19:00:11 Hours

இராணுவ பொலிஸ் படையணியின் 33வது ஆண்டு நிறைவு

இராணுவ பொலிஸ் படையணி தனது 33 வது ஆண்டு நிறைவை 2023 ஏப்ரல் 19-28 வரை பொல்ஹெங்கொட இராணுவ பொலிஸ் படையணி தலைமையகத்தில் கொண்டாடியது.

இராணுவ சம்பிரதாயங்களுக்கமைவாக இராணுவ பொலிஸ் படையணியின் படைத் தளபதியான மேஜர் ஜெனரல் அனில் எல் இளங்ககோன் அவர்களுக்கு பிரதான நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதுடன், இராணுவ சம்பிரதாயங்களின்படி அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.

அன்றைய பிரதம அதிதியான மேஜர் ஜெனரல் அனில் எல் இளங்ககோன் அவர்களை, ஒழுக்க பாதுகாப்பு பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஏசிஏ டி சொய்சா அவர்களினால் படையணி தலைமையகத்திற்கு மரியாதையுடன் வரவேற்கப்பட்டார். இராணுவ பொலிஸ் படையணி பேரவை உறுப்பினர்கள், ஓய்வுபெற்ற அதிகாரிகள், குடும்ப உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

தலைமையக வளாகத்தில் மரக்கன்று நடுதல், குழு புகைப்படம் எடுத்தல் என்பவற்றில் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுடன் இணைந்து கொண்டார்.

இராணுவ பொலிஸ் படையணி தலையைகத்தின் கோப்ரல் உணவகத்தில் அனைத்து நிலையினருடனான மதிய உணவில் கலந்து கொண்டதுடன், படையினருக்கு தனது உரையின் போது தமது படையணியின் ஆண்டு நிறைவு விழாவின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார்.

ஆண்டு நிறைவு விழா ஏற்பாடுகளின் இறுதி நிகழ்வாக, முன்னாள் படைத் தளபதி, ஓய்வுபெற்ற அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் பங்கேற்புடன் இசை நிகழ்ச்சியும் இடம் பெற்றது.

படைத் தளபதி, ஒழுக்க பணிப்பாளர் நாயகம், முன்னாள் படைத் தளபதிகள், 2023 ஏப்ரல் 19-20 களில் இராணுவ பொலிஸ் படையணி தலைமையகத்தில் ஊர்வலம், 'பிரித்' பாராயணம் மற்றும் அன்னதானம் உள்ளிட்ட பல சமய சடங்குகளை ஏற்பாடு செய்திருந்தனர். இராணுவ பொலிஸ் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்களுடன் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், மற்றும் சிப்பாய்கள் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர்.