18th May 2023 22:29:55 Hours
கஜபா படையணியின் பிரிகேடியர் டீசிசிடீஆர் வைத்தியசேகர ஆர்எஸ்பீ அவர்கள், படைவீரர்கள் பணிப்பகத்தின் புதிய பணிப்பாளராக திங்கட்கிழமை (மே 8) இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற விழாவின் போது பதவியேற்றார்.
புதிய அலுவலகத்திற்கு வந்ததும், படைவீரர்கள் பணிப்பகத்தின் புதிய பணிப்பாளராக அலுவலகத்தை ஏற்றுக்கொண்டதைக் குறிக்கும் வகையில், அதிகாரப்பூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டார். இந்த புதிய நியமனத்திற்கு முன்னர், அவர் வத்தளை, ஹெகித்த ரணவிரு வள மையத்தின் தளபதியாக பணியாற்றியுள்ளார்.
பணிப்பகத்தின் பதவி நிலை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அவர் இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பிரிகேடியர் எம் மாயாதுன்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களுக்கு பதிலாக குறித்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.