09th June 2023 18:39:39 Hours
05 ஜூன் 2023 கிளிநொச்சி முதலாம் படைத் தலைமையகத்தில் இராணுவ சம்பிரதாயமான நிகழ்விற்கமைய முதலாம் படையின் 3வது தளபதியான மேஜர் ஜெனரல் எஸ்யூஎம்என் மானகே டபிள்யுடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் தனது பதவியில் இருந்து விலகினார்.
நிகழ்வின் தொடக்கத்தில், வெளியேறும் தளபதி விஜயபாகு காலாட் படையணியின் படையினரால் மரியாதை அணிவகுப்பு வழங்குவதற்கு முன் நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. அவரது பதவி விலகல் தொடர்பான ஆவணங்களை ஒப்படைத்த பின்னர், அவர் முதலாம் படையின், படைப்பிரிவு தளபதிகள், பிரிகேட் தளபதிகள், கட்டளை அதிகாரிகள் மற்றும் பணிநிலை அதிகாரிகளுடன் குழு படத்தில் இணைந்து கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, 'நெலும்பியச' கேட்போர் கூடத்தில் முதலாம் படையினருக்கு உரையாற்றியதுடன், தனது பதவிக்காலத்தில் வழங்கிய ஆதரவிற்காக அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். அமைப்பின் நன்மை மற்றும் நற்பெயருக்காக அதே மனப்பான்மையிலும் முறையிலும் தங்கள் அர்ப்பணிப்பைத் தொடருமாறு வலியுறுத்தினார்.
இறுதியாக, முதலாம் படை தலைமைய கோப்ரல் உணவகத்தில், படைப்பிரிவு தளபதிகள், பிரிகேட் தளபதிகள், பிரிகேட் தளபதிகள், கட்டளை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுடன் தேநீர் விருந்துபசாரத்தில் கலந்து கொண்டார்.