09th June 2023 19:14:00 Hours
இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் மேஜர் ஜெனரல் வைஎபிஎம் யாம்பத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி அவர்கள் மிருசுவில் 52 வது காலாட் படைப்பிரிவின் 29 வது தளபதியாக வியாழக்கிழமை (08 ஜூன் 2023) பதவியேற்றார்.
புதிதாக நியமிக்கப்பட்ட 52 வது காலாட் படைப்பிரிவின் தளபதி பணிநிலை அதிகாரிகளினால் மரியாதையுடன் வரவேற்கப்பட்டார். மேலும் நுழைவாயிலில் இலங்கை விஜயபாகு காலாட் படையணியினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையும் வழங்கப்பட்டதுடன், அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.
அவரது புதிய அலுவலகத்தில், 'செத் பிரித்' பாராயணங்களுக்கு மத்தியில் அதிகாரப்பூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டு அவரது கடமைகளை ஏற்றுக் கொண்டார்.
பின்னர், படைப்பிரிவின் தளபதி இராணுவ மரபுகளுக்கு இணங்க அனைத்து அதிகாரிகள் மற்றும் படையினருக்கு உரையாற்றுகையில், எதிர்காலத்தில் படைப்பிரிவின் முன்னேற்றத்திற்கான தனது கருத்துகளை வெளிப்படுத்தினார்.
இந்த நிகழ்வின் போது பிரிகேட் தளபதிகள், 22 வது காலாட் படைப்பிரிவின் பணிநிலை அதிகாரிகள், கட்டளை அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.