10th June 2023 17:29:36 Hours
52 வது காலாட் படைபிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கேபீஎஸ்எ பெர்னாண்டோ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் 2023 ஜூன் 07 அன்று தனது கடமைகளை துறந்தார். அவர் பதவி விலகுவதற்கு முன்னதாக, 521 மற்றும் 523 வது காலாட் பிரிகேட்டுக்கு 05 ஜூன் 2023 விஜயம் செய்து அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு உரையாற்றினார்.
வழக்கமாக இராணுவ சம்பிரதாய முறைகளுக்கமைய வெளியேறும் படைப்பிரிவின் தளபதிக்கு 06 ஜூன் 2023 படைப்பிரிவு தலைமையகத்தில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதுடன், அதைத் தொடர்ந்து அவர் படையினருக்கு உரையாற்றினார்.
இந்த நிகழ்வில் 52 வது காலாட் படைப்பிரிவின் பிரிகேட் தளபதிகள், கட்டளை அதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.