07th June 2023 20:49:09 Hours
மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 12 வது காலாட் படைப்பிரிவின் 15 வது தளபதியாக, இலங்கைப் பொறியியல் படையணியின் மேஜர் ஜெனரல் பீபீஏ பெரேரா எச்டிஎம்சி பீஎஸ்சீ அவர்கள் அம்பாந்தோட்டை நகரவெவ 12 வது படைப்பிரிவு தலைமையகத்தில் மத ஆசீர்வாதங்கள் மற்றும் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் திங்கட்கிழமை (6) கடமைகளைப் பொறுப்பேற்றார்.
12 வது படைப்பிரிவின் தளபதி பதவிநிலை அதிகாரிகளால் வரவேற்கப்பட்டதுடன், அவருக்கு கெமுனு ஹேவா படையணியின் படையினரால் பாதுகாப்பு அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது.
புதிய அலுவலகத்தில், மகா சங்கத்தினரின் 'செத் பிரித்' பாராயணங்களுக்கு மத்தியில் தனது கடமைகளை பொறுப்பேற்கும் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையெழுத்திட்டார்.
பின்னர், புதிய தளபதி அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு உரையாற்றுகையில் எதிர்காலத்தில் படைப்பிரிவின் முன்னேற்றம் தொடர்பான கருத்துக்களை முன்வைத்தார்.
இந்நிகழ்வில் பிரிகேட் தளபதிகள், 12 வது படைப்பிரிவின் பணிநிலை அதிகாரிகள்,கட்டளை அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பலர் கலந்துகொண்டனர்.