06th June 2023 17:46:44 Hours
அக்கரைப்பற்று நகரில் இருந்து மோட்டார் சைக்கிளை திருடிக்கொண்டு அம்பாறை - அக்கரைப்பற்று வீதியில் இராணுவத்தினரின் வீதித் தடையின் ஊடாக மோட்டார் சைக்கிள் செலுத்திய சாரதி ஒருவர் தப்பிச் செல்ல முற்பட்போது கிழக்குப் பாதுகாப்புப் படை தலைமையகத்தின் 24 வது காலாட் படைபிரிவின் 241 வது காலாட் பிரகேட்டின் 11 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் படையினரால் வெள்ளிக்கிழமை (ஜூன் 02) பிடிக்கப்பட்டுள்ளார்.
சிடி 100 ரக மோட்டார் சைக்கிளில் (EP JY - 6410) பாதுகாப்பு கவசம் அணியாமல் வேகமாக ஓட்டிச் சென்றதைக் கவனித்த படையினர், சந்தேகத்தின் பேரில் அதை நிறுத்துமாறு சமிக்கை கொடுத்தனர். மீண்டும் பாசாங்குத்தனமாக மோட்டார் சைக்கிளின் வேகத்தை குறைத்த பின்னர். படையினரால் அவரை உடனடியாக பிடித்து மோட்டார் சைக்கிளின் ஆவணங்களை சோதனை செய்தனர்.
விசாரணையில், அக்கரைப்பற்று நகரில் இருந்து மோட்டார் சைக்கிளை திருடிச் சென்றவர் பாதுகாப்பு கவசம் அணியாமல் தப்பிச் செல்வதை படையினர் கண்டறிந்தனர். சில நிமிடங்களின் பின்னர், திருடப்பட்ட மோட்டார் சைக்கிளுடன் சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
24 வது காலாட் படைபிரிவின் தளபதி, 241 வது காலாட் பிரகேட் தளபதி மற்றும் 11 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் கட்டளை அதிகாரி ஆகியோர் வீரர்களின் விரைவான நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்தனர்.