23rd May 2023 18:13:42 Hours
தற்போது பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பணிப்பாளராக கடமையாற்றும் கேணல் எம்பீபீஎன் ஹேரத் ஆர்எஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் அண்மையில் இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் கௌரவ ஜீன்-பிரான்ஒயிஸ் பேக்டெட் க்கு தனது சமீபத்திய புத்தகமான ஸ்டோரி ஒப் த வேல்ட் புத்தகத்தின் பிரதியை வழங்கினார்.
கொழும்பில் உள்ள பிரான்ஸ் தூதரகத்தின் கடல்சார் பாதுகாப்பு ஆலோசகரான தளபதி ஜீன்-பாப்டிஸ்ட் ட்ரூச் அவர்களும் இந் நிகழ்வில் கலந்துகொண்டார்.
கௌரவ ஜீன்-பிரான்ஒயிஸ் பேக்டெட் , தளபதி ஜீன்-பாப்டிஸ்ட் ட்ரூச் ஆகியோருடன் எழுத்தாளர் கேணல் எம்பீபீஎன் ஹேரத் ஆர்எஸ்பீ பீஎஸ்சி சர்வதேச விவகாரங்களில் இன்றைய உலக ஒழுங்கில் கவனம் செலுத்திய அவர்களுடன் தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
புவிசார் அரசியல் கூட்டணிகள் மற்றும் போட்டிகள் கல்லில் அமைக்கப்பட்டது' என்ற இந்நூல் ஜனவரி 12, 2023 எம்.டி.குணசேன அவர்களால் வெளியிடப்பட்டது. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. பிரேமித பண்டார தென்னகோன், மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பிஎஸ்சீ எம்பீஎச்ஐஎல் ஆகியோர் உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைத்தனர்.