24th May 2023 23:14:59 Hours
இராணுவ நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூசிபி விக்கிரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ மற்றும் அவரது பணியாளர்கள் வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் அனைத்து கட்டளை அமைப்புகளின் நிர்வாக செயல்பாடுகள் தொடர்பாக தகவல்களைப் பெறுவதற்காக திங்கட்கிழமை (22) வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்கு விஜயம் செய்தனர்.
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பதவி நிலை அதிகாரிகள், படைத் தளபதிகள்,பிரிகேட் தளபதிகள் மற்றும் கட்டளை அதிகாரிகளால் முகாம் வளாகத்திற்கு வருகை தந்த இராணுவ நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் அவர்களை மரியாதையுடன் வரவேற்றனர்.
இராணுவ நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூசிபி விக்கிரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் அனைத்துப் படைப்பிரிவுகள் மற்றும் பிரிகேட்கள் தளபதிகள் மற்றும் படையலகுகளின் கட்டளை அதிகாரிகளுடன் இணைந்து, அந்தந்த நிறுவனங்களில் நிர்வாக விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடி, செயல்பாட்டு விடயங்களை சுமூகமாக நடத்த தேவையான வழிகாட்டுதல்களை வழங்கினர்.