09th March 2023 12:39:02 Hours
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும்லியனகே அவர்கள் படையினர்கள் ஆற்றி வரும் சேவைகளை அங்கீகரிப்பதற்காகவும் பாராட்டுவதற்காகவும் புதன்கிழமை (மார்ச் 08) இராணுவ தலைமையகத்தில் 16 சிப்பாய்களுக்கான பாராட்டுச் சான்றிதழ்கள் ‘யுதஹமுதபதி பிரணாம சாஹதிக’ வழங்கப்பட்டது.
சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற தேசிய மாணவர் சிப்பாய் படையணியின் ஜனாதிபதி வர்ணம் வழங்கும் விழாவிற்கு பயிற்சி நிபுணத்துவத்தை வழங்கிய 1 கடற்படை சிப்பாய் மற்றும் 1 விமானப்படை சிப்பாய் உட்பட 16 பேர் கொண்ட குழு அந்த பாராட்டுச் சான்றிதழ்களைப் பெற்றது. மேலும், இராணுவத்தில் முதல் நாள் முதல் களங்கமற்ற சேவைப் பதிவை பேணி வரும் 22 வது காலாட் படைப்பிரிவின் 01 இராணுவ சாரதியும் இதே சந்தர்ப்பத்தில் சான்றிதழ் வழங்கி பாராட்டப்பட்டார்.
இராணுவத் தளபதி அந்தப் பாராட்டு சான்றிதழ்களை வழங்கியதன் பின்னர் அவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் எதிர்காலத்திலும் அவர்கள் தமது அர்ப்பணிப்புமிக்க சேவையை வழங்குமாறு பணித்தார்.
நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எம் ஜி டபிள்யூ டபிள்யூ டபிள்யூ டபிள்யூ சி பி விக்கிரமசிங்க ஆர் டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியு பீஎஸ்சி, தேசிய மாணவர் சிப்பாய் படையணி பணிப்பாளர் பிரிகேடியர் ஜீ எஸ் பொன்சேகா யுஎஸ்பீ பீஎஸ்சி மற்றும் ஆளனி நிர்வாக பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் கேஏயு கொடித்துவக்கு ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.