05th May 2023 13:52:28 Hours
வெசாக் வாரத்தின் வழமையான கவர்ச்சியையும் வண்ணத்தையும் சேர்க்கும் வகையில், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ, இராணுவ பிரதி பதவி நிலைப் பிரதானி மேஜர் ஜெனரல் டிஜிஎஸ் சேனரத்யாப்பா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ, இராணுவ தொண்டர் படையணித் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூஏஎஸ் வணசிங்க ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ, பொதுப்பணி பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எஸ்யூஎம்என் மானகே டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ பீஎஸ்சி மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோரின் ஒன்றுகூடலுக்கு மத்தியில் இராணுவத் தலைமையக வெசாக் வலயத்தை வியாழன் (04) மாலை திறந்து வைத்தார்.
இராணுவ நிறைவேற்றுப் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி அவர்கள் இராணுவத் தளபதியையும், இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்களையும் அன்புடன் வரவேற்றார். இதனை தொடர்ந்து இராணுவத் தலைமையகம் வரை நிர்மாணிக்கப்பட்ட வெசாக் வலய அலங்காரங்களை இராணுவத் தளபதி திறந்து வைத்தார்.
இராணுவ வெசாக் வலயமானது இராணுவத் தலைமையகம் மற்றும் படையணிகளில் உள்ள பல்வேறு படையலகுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 14 சுழலும் விளக்குகள் மற்றும் 700 க்கும் மேற்பட்ட எண்கோண வெசாக் விளக்குகளை உள்ளடக்கியிருந்தன. மேலும், இராணுவ சேவை வனிதையர் பிரிவினர் வெசாக் பார்வையாளர்களுக்கு வழங்குவதற்காக ஐஸ்கிரீம் தானத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.
இராணுவத் தளபதி வெசாக் வலயம் முழுவதையும் பார்வையிட்டதுடன், இராணுவத் தலைமையகத்திற்கு முன்பாக பக்திப் பாடல்கள் இசைப்பதை காணும் முன்னர், படையினரின் அர்ப்பணிப்பு, ஈர்க்கக்கூடிய மற்றும் ஆக்கப்பூர்வமான பணிகளைப் பாராட்டினார்.
வெசாக் வாரத்தில் கொழும்பில் உள்ள 9 வெசாக் வலயங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இரண்டு பவனிகளில் இரண்டு குழுவினருடன் 'பக்தி பாடல்' காட்சியை இராணுவ இசைக்குழு மற்றும் நுன்கலைப் பணிப்பகம் அரங்கேற்றுகிறது.
இராணுவத் தலைமையக வெசாக் வலயத்திற்கு சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் பெருந்திரளான பொதுமக்கள் வருகை தந்ததுடன் நிகழ்வைக் கண்டுகளித்தனர்.