31st January 2023 18:35:27 Hours
பனாகொட இராணுவ வைத்தியசாலைக்கு வெள்ளிக்கிழமை (ஜனவரி 27) விஜயத்தை மேற்கொண்ட இலங்கை இராணுவ பொறியியல் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் லங்கா அமரபால அவர்கள் நிர்வாக செயல்முறைகள், வழங்கல் உள்கட்டமைப்பு, விடுதிகள் ஆகியவற்றை மீளாய்வு செய்தார். இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களின் வழிகாட்டுதலின்படி மேற்கூறிய பகுதிகளில் பிரச்சினைகளைக் கண்டறிதலுக்காக இவ் விஜயம் மேற் கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடதக்கதாகும்.
மேஜர் ஜெனரல் லங்கா அமரபால வைத்தியசாலை வளாகத்திற்கு வருகை தந்ததுடன் வைத்தியசாலையின் தளபதி மேஜர் பிஜிஜே. ரோஹித அவர்களினால் கொளரவமான வரவேற்புக்குப் பிறகு, மருத்துவமனையின் செயல்பாடு மற்றும் நிர்வாகம் குறித்து அவருக்குத் தெரிவிக்கப்பட்டது.
வருகை தந்த தளபதியை மேஜர் பிஜிஜே ரோஹித அவர்கள் மரியாதையுடன் வரவேற்றார், அவர் வளாகத்தை மீளாய்வு செய்யும் போது செயல்பாடு மற்றும் தற்போதைய நிர்வாகக் பிரச்சினைகள் தொடர்பாக விளக்கமளித்தார்.
இறுதியில் படைத் தளபதி தனது எண்ணங்களையும் பாராட்டுக்களையும் அதிதிகள் பதிவேட்டு புத்தகத்தில் கையெழுத்திட்டார்.