31st January 2023 18:32:55 Hours
தியத்தலாவையில் அமைந்துள்ள 111 வது காலாட் பிரிகேடின் 12 வது ஆண்டு நிறைவை 111 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் ரோஹித ரத்நாயக்க அவர்களின் வழிகாட்டலின் கீழ் திங்கட்கிழமை (ஜனவரி 30) மத அனுஷ்டானங்கள் மற்றும் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் கொண்டாடியது.
ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு, திங்கட்கிழமை (23) படையினரால் பிஹிபியஹேன முதியோர் இல்லத்தில் தூய்மை படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டதுடன், மறுநாள் (24) முதியோர் இல்லத்தின் முதியோர்களுக்கு சுவையான சிற்றுண்டி மற்றும் மதிய உணவை வழங்கி, இசை நிகழ்ச்சியால் அவர்களை மகிழ்வித்தனர்.
புதன்கிழமை (ஜனவரி 25), அனுராதபுரத்தில் உள்ள 'ஜய ஸ்ரீ மஹா போதி' மற்றும் 'ருவன்வெளி ஸ்தூபி' ஆகியவற்றைப் பார்வையிடுவதற்கு முன்னர், கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் இடம் பெற்ற அண்ணதானம் (கிரிஹர பூஜை) மற்றும் 'பிரித்' பராயணம் ஓதுதல் ஆகியவற்றில் படையினர் கலந்து கொண்டனர். மறுநாள் (26) காயமடைந்த படையினருக்கு ஆசீர்வாதம் வழங்கப்பட்டது.
(30) திகதி நடைபெற்ற ஆண்டு நிறைவு தினத்தில் 111 வது காலாட் பிரிகேட் தளபதியை மரியாதையுடன் வரவேற்கப்பட்டதுடன், தளபதிக்கு படையினரால் பாதுகாப்பு அறிக்கையிடல் மரியாதையும் வழங்கப்பட்டது. சிப்பாய்களின் உணவகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட மதிய நேர விருந்துபசாரத்தில் கலந்து கொண்டதுடன், குழு படம் எடுக்கும் நிகழ்விலும் தளபதி கலந்து கொண்டார்.
அதற்கமைய மாலை குழல் இசைக்குழு, பீட் இசைக்குழு மற்றும் நடனக் குழுவினரின் நிகழ்வுடன் இந்நிகழ்வு சிறப்பு பெற்றது.