24th January 2023 19:14:59 Hours
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சம்பக ரணசிங்க அவர்கள் ஜனவரி 16-17 ம் திகதிகளில் படையினரிடம் உரையாடல் மற்றும் தகவல்களைப் பெற்று கொள்ளும் நிமித்தம் அனுராதபுரத்தில் உள்ள 56 வது காலாட் படைபிரிவு தலைமையகத்திற்கும் வடமத்திய முன்னரங்க பராமரிப்புப் பகுதிக்கும் விஜயத்தை மேற் கொண்டார்.
வருகை தந்த வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி 56 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் மஞ்சுளகாரியவசம் மற்றும் வடமத்திய முன்னரங்க பராமரிப்புப் பகுதியின் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த வீரசிங்க ஆகியோர்களால் வரவேற்கப்பட்டார்.
இராணுவ சம்பிரதாய முறைகளுக்கமைய இரண்டு இடங்களிலும் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையை தொடர்ந்து வன்னி தளபதிக்கு வாகன தொடர் அணி மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் படையினருக்கு உறையாற்றிய அவர் முன்னரங் பராமரிப்பு பகுதி மற்றும் 56 வது படைப் பிரிவு தலைமையக வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
இரண்டு இடங்களில் இருந்து விடைப் பெற்று செல்லும் முன் முன், மேஜர் ஜெனரல் சம்பிக்க ரணசிங்க அவர்கள் பார்வையாளர்கள் புத்தகத்தில் தனது பாராட்டுகளை கையொப்பமிட்டார்.
அவர் 56 வது படைப்பிரிவின் தளபதி மற்றும் முன்னரங்க பராமரிப்பு பகுதி தளபதியுடன் தனி குழு படங்களில் கலந்து கொண்டார்.
பிரிகேட் தளபதிகள், கட்டளை அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் படைப் பிரிவின் அதிகாரிகளும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.