24th January 2023 19:17:47 Hours
மன்னார் பேசாலையில் உள்ள 543 வது காலாட் பிரிகேட் தனது 12 வது ஆண்டு நிறைவை இராணுவ சம்பிரதாய முறைகளுக்கமைய மத அனுஷ்டனங்கள் மற்றும் சமூக நிகழ்வுகளுடன் 2023 ஜனவரி 18-20 ம் திகதிகளில் கொண்டாடப்பட்டது.
அதற்கமைய பிரிகேட் தலைமையக விகாரையில் புதன்கிழமை (18) போதி பூஜை ஆசிர்வாததுடன் நிறைவாண்டின் நிகழ்வு ஆரம்பமாகின.
சமூக சார்ந்த திட்டங்களின் ஒரு பகுதியாக, 543 வது காலாட் பிரிகேடின் கீழ் உள்ள 11 வது இலங்கை பீரங்கிப் படையணியின் படையினரால் , 'கூல் மேன்' ஐஸ் நிறுவனத்தின் நிதியுதவியுடன் தலைமன்னார் மாகாண வைத்தியசாலையில் நோயாளர்களுக்கான தனி காத்திருப்புப் பகுதி நிர்மாணித்து வைத்தியசாலை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஆண்டு நிறைவு நாளான 20 ம் திகதி இராணுவ சம்பிரதயங்களுக்கமைய 543 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் துஷார ஹரஸ்கம அவர்களின் வருகையை தொடர்ந்து அவருக்கு படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மற்றும் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. பின்னர், அன்றைய பிரதம அதிதி படையினருக்கு உரையாற்றுதல், குழு படம் எடுத்தலுடன் பிரிகேட் தலைமையக வளாகத்தினுள் மரக்கன்று நடுவதில் இணைந்து கொண்டார்.