26th January 2023 19:27:00 Hours
8 வது இலங்கை சிங்க படையணியின் படையினரால் கட்டளை அதிகாரியின் தலைமையில் செவ்வாய்க்கிழமை (24) பிற்பகல் யட்டியாந்தோட்டை, பெரகஸ் சந்தி, தேனாங்கவவத்தை பகுதிக்கு விரைந்து சென்று, கல் குவரியில் இறந்த தொழிலாளியின் சடலம் மீட்கப்பட்டது.
இந்த நடவடிக்கையானது மேற்குப் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள 611 வது காலாட் பிரிகேட் படையினரால், 61 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மற்றும் 611 வது காலாட் பிரிகேட் தளபதியின் வழிகாட்டுதலின் பேரில் கயிறுகளைப் பயன்படுத்தி இறந்த தொழிலாளியின் சடலம் குவாரிக்குள் கண்டுபிடிக்கப்பட்டு பொலிசார் மற்றும் பொதுமக்களின் உதவியுடன் மீட்கப்பட்டன.