23rd January 2023 15:50:39 Hours
வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் சேவையாற்றும் 54 இளம் அதிகாரிகளுக்கு தொழில் முன்னேற்றம் மற்றும் கடமைப் பொறுப்புகள் பற்றிய அறிவைப் புதுப்பிப்பதற்கான கனிஷ்ட அதிகாரி செயலமர்வு எண்-2 ஜனவரி 18-20 ஆம் திகதிகளில் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சம்பக ரணசிங்க அவர்களின் வழிகாட்டலின் கீழ் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பங்கேற்பாளர்கள் தங்கள் அறிவைப் புதுப்பிக்கவும் புவியியல் தகவல் அமைப்புகள் மற்றும் அதன் இராணுவ பயன்பாடுகள் உணவு கணக்கீடு, இராணுவ தகவல் பரிமாறல், பொது சட்டம், நடவடிக்கை சட்டம், ஒழுக்கம் மற்றும் குற்றங்கள், மனதைரியம் மற்றும் விளையாட்டுகள் தொடர்பான அறிவினை பெற்றனர்.
56 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் மஞ்சுளா காரியவசம் அவர்களால் நிகழ்த்தப்பட்ட விரிவுரையுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.