23rd January 2023 16:10:39 Hours
கஜபா படையணி தலைமையகத்தில் சனிக்கிழமை (21) இடம்பெற்ற விசேட நிகழ்வின் போது அதன் சிரேஷ்ட மற்றும் அர்ப்பணிப்புள்ள ஓய்வுபெரும் மூன்று அதிகாரிகளான மேஜர் ஜெனரல் லால் விஜேதுங்க, பிரிகேடியர் நிஷாந்த ஜயசுந்தர, மற்றும் பிரிகேடியர் ஜூட் பெரேரா ஆகியோர் இராணுவத்தில் முறையே 33,32 மற்றும் 31 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பான சேவையாற்றியமைக்காக பிரியாவிடை வழங்கப்பட்டது.
சாலியபுர கஜபா படையணி தலைமையக வளாகத்தில் இராணுவ மரபுகளுக்கு அமைவாக நடைபெற்ற இந்த தனித்தனியான வைபவங்களில் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.
சம்பிரதாய ரீதியிலான பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையினை தொடர்ந்து கஜபா படையணி ஸ்தாபகத் தந்தை மறைந்த மேஜர் ஜெனரல் விஜய விமலரத்னவின் திருவுருவச் சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து அன்றைய நிகழ்வுகள் ஆரம்பமானது. கஜபா படையணி நிலைய தளபதி பிரிகேடியர் விஷ்வஜித் வித்யானந்த அவர்கள் சிரேஷ்ட அதிகாரிகளுடன் தனித்தனியாக ஓய்வுபெறும் அதிகாரிகளை வரவேற்றார்.
ஒவ்வொரு சிரேஷ்ட அதிகாரிகளும் மரியாதை அணிவகுப்பிணை ஏற்றுகொண்டதுடன் தனித்தனியாக படையினருக்கு உரையாற்றினர்.
இந்த நிகழ்வில் சம்பிரதாயங்களின் ஒரு பகுதியாக படையணி தலைமையகத்தில் உள்ள படையினர் விருந்தகத்தில் அனைத்து நிலையினருக்குமான தேநீர் விருந்துபசாரம் வழங்கப்பட்டது.
இராணுவத் தளபதியும் கஜபா படையணி படைத்தளபதியுமான லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களால் வழங்கப்பட்ட இராணுவ சம்பிரதாய இரவு உணவு விருந்துபசாரத்துடன் அன்றைய தின நிகழ்வுககள் நிறைவடைந்தன. அன்றைய தினம் (21) மாலை கஜபா படையணி தலைமையகத்தில் நடைப்பெற்ற விருந்துபசாரத்தில் கஜபா படையணி அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.