Header

Sri Lanka Army

Defender of the Nation

22nd January 2023 00:03:37 Hours

1 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையினரால் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கல்

மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 14 வது காலாட் படைப்பிரிவின் 143 வது காலாட் பிரிகேடின் 1 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் படையினர் குருநாகல் பகுதியில் உள்ள மூன்று பாடசாலைகளில் கல்வி கற்கும் 60 மாணவர்களுக்கு புதன்கிழமை (ஜன. 18) மதிய விருந்தினை வழங்கினர்.

சியம்பலேவ ஸ்ரீ சோபிதா ஆரம்பப் பாடசாலை, தம்பராவ ஆரம்பப் பாடசாலை மற்றும் கல்லேகொட ஆரம்பப் பாடசாலையைச் சேர்ந்த 60 மாணவர்களுக்கு 1 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் படையினரின் உதவியுடன் அப்பகுதியைச் சுற்றியுள்ள பொதுமக்களின் உள்நாட்டு தானிய வகைகளின் நன்கொடை உதவியுடன் இந்த மதிய உணவு வழங்கப்பட்டது.

மேற்கு பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் தீபால் புஸ்ஸல்ல மற்றும் 14 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ரொஷான் ஜயமான்ன ஆகியோர் இத் திட்டத்தின் வெற்றிக்கு தேவையான வழிகாட்டல்களை வழங்கினர்.

இந்த சமூக நலத்திட்டதிற்கான அனைத்து ஏற்பாடுகளும் 143 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் பௌமி கிட்ச்சிலன் மற்றும் 1 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி கட்டளை அதிகாரி மேஜர் கே எ எஸ் பி குமார ஆகியோரின் நெருக்கமான மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்பட்டன.