21st January 2023 23:58:19 Hours
உளவியல் செயற்பாட்டு பணிப்பகம் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 15) 02 அதிகாரிகள் மற்றும் 50 சிப்பாய்கள் பங்கேற்புடன் தெல்கொட பவுன்செத் தியான மையத்தில் ‘செபல சிதட மானசிக ஜவய’ (சிப்பாய்களின் மனஎழுச்சி) என்ற தொனிப்பொருளில் மூன்று வதிவிட தியான நிகழ்ச்சியை ஆரம்பித்தது.
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களின் வழிகாட்டுதலின்படி இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதுடன் உளவியல் செயற்பாட்டு பணிப்பக பணிப்பாளர் பிரிகேடியர் அஜித் விக்ரமசேகர இதனை நடைமுறைப்படுத்துவதில் முக்கிய பங்காற்றினார்.
இராணுவ வீரர்களின் ஆன்மீக வளர்ச்சியை மேம்படுத்துதல் மற்றும் வலுப்படுத்துதல் மற்றும் தேசத்திற்கான அவர்களின் கடின அர்ப்பணிப்பு சேவையை பராமரிக்க அவர்களை ஊக்குவிப்பதே இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் நோக்கமாகும்.
பிரதி பணிப்பாளர் கேணல் ருவன் குணரத்ன கலந்துகொண்டதுடன் களனி நாகாநந்த சர்வதேச பௌத்த பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் வண. தியசென்புர விமல தேரர் அவர்களின் தலைமையில் விரிவுரைகள் நடைப்பெற்றன.