20th January 2023 20:25:54 Hours
இலங்கை இராணுவ வைத்திய படையணி தனது 33 வது ஆண்டு நிறைவை இராணுவ சம்பிரதாயங்கள், சமய சடங்குகள் மற்றும் சமூக நிகழ்ச்சிகளுடன் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 15) வைத்திய படையணி படைத்தளபதியும் இராணுவ சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமுமான பிரிகேடியர் கிறிஷாந்த பெர்னாண்டோ தலைமையில் வெரஹேரவில் கொண்டாடியது.
அன்றைய நிகழ்வுகள் படைத்தளபதியின் வருகையுடன் ஆரம்பமாகியது. இலங்கை இராணுவ வைத்திய படையணி நிலைய தளபதி பிரிகேடியர் மஹேன் சல்வத்துர அவர்கள் பிரதம அதிதியை வரவேற்றதுடன் இலங்கை இராணுவ வைத்திய படையணி படையினரின் வண்ணமயமான பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் மரியாதை அணிவகுப்பு என்பன வழங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து படைத்தளபதி மகா சங்க உறுப்பினர்கள் முன்னிலையில் நடைபெற்ற எளிய சமய நிகழ்வில் கலந்து கொண்டதுடன் அனைத்து நிலையினருடனான தேநீர் விருந்துபசாரத்திலும் அதனை தொடர்ந்து மதிய உணவு விருந்திலும் கலந்துகொண்டார்.
அதற்கமைய ஜனவரி 03 - 09 வரை இலங்கை இராணுவ வைத்திய படையணி படையினரிடையே தோழமையை மேம்படுத்தும் வகையில் கிரிக்கெட் போட்டியினை ஏற்பாடு செய்திருந்தனர். இந் நிகழ்வுக்கு இணையாக மஹரகம உள்ள அபேக்ஷா புற்று நோய் வைத்தியசாலைக்கு இளநீர்களை நன்கொடையாக வழங்கினர்.