19th January 2023 21:10:33 Hours
யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 55 வது காலாட் படைபிரிவு படையினரால் அமெரிக்காவை வசிப்பிடமாக கொண்ட திரு விஷ் நடராஜா அவர்களின் அனுசரணையின் 55 வது காலாட் படைபிரிவின் சிரேஷ்ட அதிகாரவாணையற்ற அதிகாரியின் 4 ஆண்டுகளுக்கும் மேலாக முழுமையாக நிறைவு செய்யப்படாத வீடு நிறை செய்யப்பட்டது.
55 வது காலாட் படைபிரிவு படையினர் நன்கொடையாளரினால் வழங்கப்பட்ட 1.3 மில்லியன் ரூபா நிதியுதவியில் இத் திட்டம் சில வாரங்களில் நிறைவுக்கு கொண்டுவந்தனர். இவ் வீடானது 3 படுக்கை அறைகள், சமையலறை, சாப்பாட்டு அறை, வரவேற்பு அறை மற்றும் ஒரு விராண்தை என்பவற்றை கொண்டுள்ளது.
55 வது காலாட் படைபிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன குணரத்ன அவர்கள் திட்டத்தை நிறைவு செய்த படையினருடன் இணைந்து சமீபத்தில் குறித்த இடத்திற்குச் சென்று பார்வையிட்டதுடன், தனது இரண்டு மகள்மாருடன் வசிப்பதற்கான அவரது கனவு வீடு பயனாளிக்கு உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டது.