16th January 2023 19:35:53 Hours
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சம்பக ரணசிங்க அவர்கள் 2023 ஜனவரி 11 ம் திகதி மன்னாரில் அமைந்துள்ள 54 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்திற்கு விஜயம் செய்தார். இப் படைப்பிரிவுக்கு வருகை தந்த தளபதியை 54 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் நலிந்த நியங்கொட அவர்களால் வரவேற்கப்பட்டதுடன், படையினரால் பாதுகாப்பு அறிகையிடல் மரியாதை வழங்கப்பட்டது.
அதன் பின்னர், 54 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்தில் உள்ள நினைவுத்தூபியில் வீரமரணம் அடைந்த போர் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய மேஜர் ஜெனரல் சம்பகர ரணசிங்க அர்ப்பணிப்புடன் பணியாற்றுமாறு படையினருக்கு உரை நிகழ்தினார். இறுதியாக, இராணுவத்தின் தரத்தை உயர்த்துவதற்காக அதிகாரிகள் மற்றும் வீரர்களுக்கான பயிற்சியின் மதிப்பு தொடர்பாகவும் வலியுறுத்தினார்.
அதன் பின்னர், வன்னிப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி அவர்கள் அனைத்து நிலையினருடன் இணைந்து தேநீர் அருந்துவதற்கு முன், அவரது வருகையைக் குறிக்கும் வகையில் முகாம் வளாகத்தில் மாங்கன்று ஒன்றை நாட்டினார்.