16th January 2023 19:46:03 Hours
இராணுவத்தினரால் நிர்வகிக்கப்படும் லயா செய்ன் ஒப் ஹோட்டல் தொழில்முறை தரத்தை மேலும் மேம்படுத்தும் நிமித்தம் 50 'லயா' ஹோட்டல் பணியாளர்களுக்கு 'ஹோட்டல் நிர்வாகம் தொடர்பான முழு நாள் பயிற்சித் திட்டத்தைத் (ஜனவரி 12) வாத்துவவிலுள்ள லயா பீச் ஹோட்டலில் முன்னெடுத்தது. விரிவுரையினை திரு.விஜித விஜேரத்ன அவர்கள் நிகழ்த்தினார்.
இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே மற்றும் லயா சென் ஒப் ஹோட்டலின் பணிப்பாளரும் பிரதம செயற்பாட்டு அதிகாரியுமான பிரிகேடியர் ரொஹான் பெஞ்சமின் ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரில் ஆரம்பிக்கப்பட்ட இந்த வேலைத்திட்டமானது, சவாலான அம்சங்களை எதிர்கொள்ளும் வகையில் தொழில்துறையின் முறையான முகாமைத்துவத்தை மேற்கொள்வதற்கான நோக்கமாக கொண்டிருந்தது. இந்த திட்டத்தில் மூன்று இலங்கை கடற்படையினர்களும் கலந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடதக்கதாகும்.
லயா செய்ன் ஒப் ஹோட்டலின் பணிப்பாளர் மற்றும் பிரதம செயற்பாட்டு அதிகாரியின் அழைப்பின் பேரில் இலங்கை இராணுவ நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க அவர்கள் பிரதம அதிதியாக நிகழ்வில் கலந்து கொண்டார்.