16th January 2023 19:51:14 Hours
மாதுரு ஓயா இராணுவ பயிற்சி பாடசாலையின் 38 வது ஆண்டு நிறைவு ஜனவரி 9-14 ம் திகதிகளில் மத மற்றும் இராணுவ சம்பிரதாயங்களுக்கமைய கொண்டாடப்பட்டது.
ஜனவரி 9 ஆம் திகதி பொலன்னறுவை ரோமன் கத்தோலிக்க தேவாலயம், கதுருவெல ஜும்மா மஸ்ஜித் பள்ளிவாசல் மற்றும் மனன்பிட்டிய இந்து கோவில் ஆகியவற்றில் இராணுவ பயிற்சி பாடசாலையின் மத ஆசீர்வாதங்களுடன் ஆண்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின.
அடுத்த நாள் (ஜனவரி 10), அப், பகுதியில் உள்ள 25 பௌத்த பிக்குகளுக்கு தானம் வழங்கப்படுவதற்கு முன்பு, மகா சங்கத்தினர் ‘பிரித்’ பாராயணத்துடன் இராணுவ பயிற்சி பாடசாலைக்கு ஆசீர்வாதம் வழங்கினர்.
அடுத்து, இராணுவ பயிற்சி பாடசாலையின் இல் சேவையாற்றும் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் மொத்தம் 98 பேர் தாமாக முன்வந்து மருத்துவ ஊழியர்களின் ஆதரவுடன் பொலன்னறுவை பொது வைத்தியசாலைக்கு இரத்த தானம் வழங்கினர்.
ஆண்டு நிறைவு நாளில் (13) இராணுவ சம்பிரதாயங்களுக்கமைய இராணுவ பயிற்சி பாடசாலையின் தளபதி மேஜர் ஜெனரல் சேனக கஸ்தூரிமுதலி அவர்களுக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் மரியாதை அணிவகுப்பு வழங்கப்பட்டது.
அதே நாளில் அனைத்து நிலையினருக்குமான மதிய உணவு விருந்துபசாரத்துடன் நிறைவாண்டு முடிவுக்கு வந்தது.