13th January 2023 17:40:26 Hours
ஜனவரி 12 ஆம் திகதி மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக படையினருக்கு பனாகொட இலங்கை இலேசாயுத காலாட் படையணி விரிவுரை மண்டபத்தில் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியினால் ‘சட்டம் மற்றும் ஒழுங்கைப் பேணுதல்’ என்ற தலைப்பில் விரிவுரை நடத்தப்பட்டது.
மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதியின் வேண்டுகோளுக்கு இணங்க சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் (குற்றம் மற்றும் போக்குவரத்து) திரு.கமல் சில்வா அவர்கள் விரிவுரையை நடாத்தியதுடன் நீதித்துறை நடைமுறை, சட்டத்தின் வகைப்பாடு, நீதிமன்றப் படிநிலை, கள நடவடிக்கைகளின் போது தற்போதுள்ள சட்டக் கட்டமைப்பின் கீழ் இராணுவம் மற்றும் பொலிஸார் இடையே ஒருங்கிணைப்பு, இலங்கையின் சட்ட முறைமை குறித்து படையினருக்கு அறிவூட்டினார்.
இந்த விரிவுரையின் போது மேற்கு பாதுகாப்பு படை தலைமையக அதிகாரிகள் உட்பட மொத்தம் 360 படையினர் கலந்து கொண்டனர்.