13th January 2023 17:10:26 Hours
முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 68 வது காலாட் படைப் பிரிவின் 682 வது காலாட் பிரிகேடின் 6 வது இலங்கை தேசிய பாதுகாப்புப் படையணி படையினர் தங்களின் சொந்த நிதியைப் பயன்படுத்தி திங்கட்கிழமை (ஜன 09) புதுக்குடியிருப்பு வாழைமடம் மேரி பாலர் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு தலா ரூபா 3300.00 பெறுமதியான ஐந்து ஜோடி பாடசாலைக் காலணிகளை வழங்கினர்.
6 வது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணி கட்டளை அதிகாரி மேஜர் டி எம் டி எஸ் திஸாநாயக்க மற்றும் படையணி படையினரின் அன்பான அனுசரணையுடன் இந் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. அந்த காலணிகளை வழங்கும் போது அதிகாரிகள், படையினர் மற்றும் பயிற்சி கல்விசார் ஊழியர்களும் உடனிருந்தனர்.