13th January 2023 17:20:26 Hours
அண்மையில் நியமிக்கப்பட்ட கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் சுஜீவ ஹெட்டியாராச்சி அவர்கள் ஜனவரி 5-6 திகதிளில் 22 வது காலாட் படைபிரிவு தலைமையகத்தின் கீழ் உள்ள பிரிகேட்கள் மற்றும் படையலகுகளுக்கு தனது முறையான முதல் விஜயத்தை மேற்கொண்டார்.
இவ் விஜயங்களின் போது அவர் 221,222 மற்றும் 223 வது காலாட் பிரிகேட்களுக்கும், 6 வது இலங்கை கவசப் வாகன படையணி, 15 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி மற்றும் 5 வது (தொ) இலங்கை பீரங்கி படையணி படையினரையும் சந்தித்தார்.
வருகை தந்த கிழக்குத் தளபதிக்கு ஒவ்வொரு பிரிகேட் மற்றும் படையலகுகளுக்கு அன்புடன் வரவேற்றளிக்கப்பட்டதுடன் அந்தந்த அமைப்புகளில் பாதுகாப்பு அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது.
பிரிகேட் தளபதிகள் மற்றும் படையலகு கட்டளை அதிகாரிகள் வருகை தந்த தளபதிக்கு அந்தந்த பகுதிகளில் தங்களின் செயல்பாடுகள் மற்றும் வகிபங்கு குறித்து விளக்கினர். ஒவ்வொரு இடத்திலும் மேஜர் ஜெனரல் சுஜீவ ஹெட்டியாராச்சி படையினருக்கு உரையாற்றியதுடன் தனது நோக்கத்தை வெளிப்படுத்தியதுடன், ஒழுக்கத்தின் உயர் தரத்தை பேணுவதன் மூலம் தொழில்சார் பயிற்சியின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார்.
அவரது விஜயத்தின் முடிவில், ஒவ்வொரு விருந்தினர் பதிவிட்டு புத்தகங்களில் தனது எண்ணங்களை பதிவிட்டார்.
22 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சாலிய அமுனுகம பிரிகேட் தளபதிகள் கட்டளை அதிகாரிகள், பணிநிலை அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் இந்த விஜயங்களுடன் இணைந்திருந்தனர்.