05th January 2023 20:16:11 Hours
கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் படிப்பளை கிராம அதிகாரி பிரிவில் இதுவரை 11 வது (தொ) இலங்கை சிங்கப் படையணி படையினரால் பயன்படுத்திய 2 ஏக்கர் காணி மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகத்திற்கு உரியவர்களுக்கு வழங்குவதற்காக வெள்ளிக்கிழமை (டிசம்பர் 30) விடுவிக்கப்பட்டது.
இராணுவத் தலைமையகத்தினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு இணங்க 231 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் திலுப பண்டார அவர்களின் மேற்பார்வையின் கீழ் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
231 வது காலட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் திலுப பண்டார, மட்டக்களப்பு மாவட்ட காணி செயலாளர், மண்முனை உதவி பிரதேச செயலாளர், தென்மேற்கு காணி உரிமையாளர்கள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் காணி விடுவிப்பு நிகழ்வில் உடனிருந்தனர்.