Header

Sri Lanka Army

Defender of the Nation

03rd January 2023 20:34:39 Hours

இராணுவ முகாம் வளாகத்தில் மரக்கன்றுகள் நாட்டல்

மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகம் மற்றும் பனாகொட இராணுவ முகாமினை பசுமையாக்கும் நோக்கத்துடனும் வீட்டுத் தோட்டக்கலைக்கு ஆதரவளிக்கும் வகையிலும் திங்கட்கிழமை (2) பனாகொட இராணுவ முகாமில் அமைந்துள்ள படையணி தலைமையகம் மற்றும் கட்டளையலகுகளுக்கு 200 பலா, இழுப்பை, மஹோகனி மரக்கன்றுகளை வழங்கப்பட்டது.

இராணுவத்தின் வீட்டுத்தோட்ட முயற்சிக்கு ஆதரவாக மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் தீபால் புஸ்ஸல்லாவின் கருத்தியல் ஆலோசனையின் பேரில் இத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஒருங்கிணைப்புடன் களுத்துறை பிரதேச வன அலுவலகத்தினால் மரக்கன்றுகள் இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டது.