03rd January 2023 20:31:58 Hours
மேஜர் ஜெனரல் நலிந்த நியங்கொட அவர்கள் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 30) மன்னாரில் உள்ள 54 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது 54 வது படைப்பிரிவின் புதிய தளபதியாக கடமைகளைப் பொறுப்பேற்றார்.
இராணுவ மரபுகளுக்கு இணங்க, மேஜர் ஜெனரல் நலிந்த நியங்கொட அவர்கள் படைப்பிரிவு தலைமையக வளாகத்திற்கு வந்தடைந்ததும் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை அளிக்கப்பட்டதினை தொடர்ந்து நினைவுத்தூபியில் உயிரிழந்த போர்வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் கெமுனு ஹேவா படையினரால் மரியாதை அணிவகுப்பும் வழங்கப்பட்டது.
நான்கு பிரதான மத ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் புதிய படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் நலிந்த நியங்கொட அவர்கள் தனது புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொண்டதை அடையாளப்படுத்தும் ஆவணத்தில் கையொப்பமிட்டார்.
அந் நிகழ்வில் நினைவுகளை சேர்க்கும் முகமாக பல குழு படங்களுக்கு தோன்றியதன் பிறகு அவர் வளாகத்தில் மரக்கன்று ஒன்றையும் நட்டினார்.
54 வது காலாட் படைப்பிரிவின் படைத்தளபதி தனது பணி மற்றும் கடமைகளை நிர்ணயித்து, அந்த பிரிவில் பணியாற்றும் அனைத்து அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு உரையாற்றுகையில் அர்ப்பணிப்புடனும் உயர் தரமான ஒழுக்கத்துடனும் பணியாற்றுமாறு வலியுறுத்தினார்.
541, 542 மற்றும் 543 வது காலாட் பிரிகேட் தளபதிகள் மற்றும் கட்டளை அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இவ் விழாவில் கலந்துகொண்டனர்.
மேஜர் ஜெனரல் நலிந்த நியங்கொட அவர்கள் இந்த நியமனத்திற்கு முன்னர் தியத்தலாவ இலங்கை இராணுவ கல்வியற்கல்லூரியின் தளபதியாக கடமையாற்றினார்.