27th December 2022 19:33:26 Hours
கந்தளாய் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் 7 வது இராணுவ புலனாய்வு படையணி படையினரால் ஞாயிற்றுக்கிழமை (25) விற்பனைக்காக எடுத்துச் செல்லப்பட்ட 60 மில்லிகிராம் “மெத்தம்பெட்டமைன்” (ஐஸ்) போதைப்பொருளுடன் ஒரு சந்தேகநபரும், 04 கிராம் கஞ்சாவுடன் (கேரள கஞ்சா) மற்றொரு சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ ஹெட்டியாராச்சி, 22 வது காலாட் படைபிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சாலிய அமுனுகம மற்றும் 222 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் நாலக மல்சிங்க அவர்களுடன் இணைந்து தேவையான வழிகாட்டல்களை வழங்கியதுடன், 7 வது இராணுவ புலனாய்வு படையணி கட்டளை அதிகாரியான லெப்டினன் கேணல் ஜே.எல்.என் சில்வா படையினரை கண்காணித்தார்.