Header

Sri Lanka Army

Defender of the Nation

20th December 2022 21:22:47 Hours

முதலாம் படையணி தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் கிரிஷாந்த ஞானரத்ன காரியாலயம் துறப்பு

முதலாம் படையணி தலைமையக 2 வது தளபதியான மேஜர் ஜெனரல் கிரிஷாந்த ஞானரத்ன ஓய்வுபெறும் தருவாயில் 2022 டிசம்பர் 15 அன்று கிளிநொச்சி தலைமையகமாக கொண்ட முதலாம் படையணியில் நடைபெற்ற சம்பிரதாயமான இராணுவ வைபவத்தின் போது தனது கடமைகளில் விலகினார்.

முன்னதாக முதலாவது படையணி தலைமையக நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை அளிக்கப்பட்டு வரவேற்கப்பட்டதுடன் பின்னர் 2 வது கமாண்டோ படையணி படையினரால் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

அதன்பின், வெளியேறும் தளபதி, முதலாவது படையணி தலைமையகத்தில் பணியாற்றும் அனைத்து படைப்பிரிவு தளபதிகள், பிரிகேட் தளபதிகள், கட்டளை அதிகாரிகள் மற்றும் பணிநிலை அதிகாரிகளுடன் குழு படத்தினை எடுத்துகொண்டார்.

அதனைத் தொடர்ந்து, "நெலும்பியச" மாநாட்டு மண்டபத்தில் முதலாவது படையணி படையினருக்கு உரையாற்றிய அவர், தனது 34 ஆண்டுகால பணியின் முக்கியமான அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டதுடன், தனது பதவிக்காலத்தில் தமக்கு வழங்கிய ஆதரவிற்காக அனைவருக்கும் நன்றி தெரிவித்ததுடன், அதே உணர்வில் அமைப்பின் நற்பெயரை காக்கும் வண்ணம் தமது அர்ப்பணிப்பைத் தொடருமாறு வலியுறுத்தினார். படையினருக்கான உரையின் முடிவில், முதலாம் படையணி பிரிகேடியர் பொதுப்பணி மற்றும் முதலாம் படையணி பிரிகேடியர் நிர்வாகம் மற்றும் விடுதி ஆகியோர் இணைந்து வெளியேறும் முதலாம் படையணி தளபதிக்கு நினைவுப் பரிசு வழங்கினர்.

அன்றைய நிகழ்வின் இறுதியில், மேஜர் ஜெனரல் கிரிஷாந்த ஞானரத்ன அவர்கள் படையினருடன் தேநீர் விருந்துபசாரத்தில் இணைந்துகொண்டார். இந்த நிகழ்வில் படைப்பிரிவு சிப்பாய்கள் படையினர் கலந்துகொண்டனர்.