20th December 2022 17:46:21 Hours
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 11 வது படைப்பிரிவின் புதிய தளபதியாக விஜயபாகு காலாட்படை படையணியின் மேஜர் ஜெனரல் ரோஹித அலுவிஹாரே அவர்கள் திங்கட்கிழமை (19) மத அனுஷ்டானங்களுக்கு மத்தியில் பல்லேகலையில் உள்ள 11 வது படைப் பிரிவு தலைமையகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 11 வது படைப்பிரிவின் தளபதியை பணிநிலை அதிகாரிகள் அன்புடன் வரவேற்றதுடன் அவருக்கு வளாக நுழைவாயில் படையினரால் பாதுகாப்பு அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் இராணுவ முறைப்படி இராணுவ அணுவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.
புதிய படைப்பிரிவு தளபதி தனது கடமைகளின் பொறுப்பேற்றதன் அடையாளமாக அதிகாரப்பூர்வ ஆவணத்தில் கையெழுத்திட்டார். சிறிது நேரத்திற்குப் பிறகு, படைப்பிரிவு தளபதி அனைத்து அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு உரையாற்றிதுடன் அங்கு அவர் எதிர்காலத்தில் படைப்பிரிவுக்கான தனது முன்னேக்குபார்வையை தெளிவுப்படுத்தினார்.
இந்த நிகழ்வின் போது பிரிகேட் தளபதிகள், 11 வது படைப்பிரிவின் பணிநிலை அதிகாரிகள், கட்டளை அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.
விரைவில் ஓய்வு பெற உள்ள மேஜர் ஜெனரல் கல்ப சஞ்சீவ அவர்களுக்கு பதிலாக இவர் குறித்த பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.