Header

Sri Lanka Army

Defender of the Nation

20th December 2022 17:31:19 Hours

இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தின் ஐக்கிய நாடுகளின் இராணுவ மேற்பார்வை பாடநெறி - 01 நிறைவு

ஐக்கிய நாடுகளின் இராணுவ மேற்பார்வை பாடநெறி இலக்கம் ஒன்று - 2022 இன் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தின் தளபதி பிரிகேடியர் சிந்தக ராஜபக்ஷ தலைமையில், இலங்கையின் அமைதி காக்கும் ஆதரவு நடவடிக்கைகளுக்கான பயிற்சி நிறுவனத்தில் டிசம்பர் 16 அன்று நடைபெற்றது.

2022 நவம்பர் 28 முதல் டிசம்பர் 16 வரை இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தின் ஆயுதப்படைகளின் 37 மாணவர் அதிகாரிகளின் பங்கேற்புடன் இப் பாடநெறி நடத்தப்பட்டது.

இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவனம் பாடநெறி முக்கியமாக இராணுவ மேற்பார்வை செய்ய எதிர்பார்க்கப்படும் பிரதான பொறுப்புகளில் கவனம் செலுத்தியதுடன் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் நடவடிக்கை துறை வழங்கிய வழிகாட்டுதல்களுடன் பொருந்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

விரிவுரைக் குழுவில் 02 வெளிநாட்டு அதிகாரி பயிற்றுனர்களான பங்களாதேஷ் இராணுவத்தைச் சேர்ந்த லெப்டினன் கேணல் எம்.டி ஷெரீப் ரைஹான் மற்றும் நேபாள இராணுவத்தின் மேஜர் லக்ஷ்மன் கட்கா மற்றும் 03 இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்றுவிப்பாளர்களான லெப்டினன் கேணல் பீ.டப்ளியூ கருணாரத்ன, லெப்டினன் கேணல் கேஏஏகே கருணாரத்ன மற்றும் மேஜர் அமித விஜகோன் ஆகியோர் மாணவர் அதிகாரிகளுக்கு அவர்களின் அனுபவத்துடன் கற்பித்தனர்.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக கலந்துக் கொண்ட இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவனம் தளபதி பிரிகேடியர் சிந்தன ராஜபக்ஷ அவர்கள் நிறைவுரை ஆற்றினார். விழாவில் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.