20th December 2022 17:36:48 Hours
மத்திய பாதுகாப்பு படை தலைமையகத்தின் பல்லேகலையில் உள்ள 11 வது காலாட் படைப்பிரிவின் படையினரால் பதவி விலகும் தளபதி மேஜர் ஜெனரல் கல்பசஞ்சீவ அவர்களுக்கு வெள்ளிக்கிழமை (16) பிரியாவிடை மரியாதை வழங்கப்பட்டது.
அவர் வளாகத்திற்கு வந்தவுடன் அன்றைய நிகழ்ச்சி நிரல் ஆரம்பமானதுடன் 11 வது படைப்பரிவின் பணி நிலை அதிகாரிகளால் அவர் வரவேற்கப்பட்டதுடன் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதை தொடர்ந்து, நிகழ்வின் நினைவாக படைப்பிரிவு தலைமையக வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டது. பின்னர், பிரதம அதிதி அணி வகுப்பு மரியாதை வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
பிறகு, அவர் படையினர்களுக்கு உரையாற்றியதுடன், மேலும் அவர் தளபதியாக பதவியில் இருந்தபோது தனக்கு வழங்கிய ஆதரவுக்கு அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
இந்த நிகழ்வின் இறுதியாக, வெளியேறும் தளபதி அனைத்து படையினர்களுடன் தேநீரில் விருந்துபசாரத்திலும் கலந்து கொண்டு அவர்களுடன் தனது கருத்துகளை பகிர்ந்துகொண்டார். ஓய்வுபெறும் தளபதிக்கு பணி நிலை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களால் பல பாராட்டு நினைவு சின்னங்கள் வழங்கப்பட்டன.