19th December 2022 18:20:55 Hours
மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் சேவையாற்றும் படையினரால் கம்பஹா ரத்னாவலி பெண்கள் பாடசாலையில் கல்விக் கண்காட்சியை வெற்றிகரமாக நடத்துவதற்கு கூடங்களை அமைத்து பங்களித்தனர். இக் கண்காட்சியானது டிசம்பர் 15 முதல் 17 வரை இடம் பெற்றது.
பாடசாலை நிர்வாகம் அவர்களின் 75வது நிறுவனர் தினத்தை முன்னிட்டு கண்காட்சியை ஏற்பாடு செய்திருந்தது.
இத்திட்டமானது 141 வது தளபதி பிரிகேடியர் பந்துல காரியவசம் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 11 வது இலங்கை சமிஞ்சை படையணி, இலங்கை பீரங்கிப் படையணி மற்றும் முதலாவது இலங்கை இராணுவத் உபகரண படையணியின் படையினர் இணைந்து ஆயுத முறைமை, இராணுவத் உபகரணங்கள் மற்றும் இராணுவ உபகரணங்களைக் கொண்ட கூடங்களை அமைத்து இக் காட்சிக்கு ஒத்துழைப்பு வழங்கினர்.