16th December 2022 19:35:01 Hours
66 வது காலாட் படைபிரிவு அதன் 13 வது ஆண்டு நிறைவை மத ஆசீர்வாதங்கள் மற்றும் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் 66 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் நளின் ஜெயவர்தன அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் கொண்டாடியது.
ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு, காலாட் படைப்பிரிவில் சேவையாற்றும் படையினருக்கு ஆசி வழங்கும் முகமாக 66 வது காலட் படைப்பிரிவு புத்த சந்நிதி, பூநகரி புனித மரியாள் தேவாலயம், பள்ளிக்குடா முருகன் கோவில், கிளிநொச்சி ஜும்மா முஸ்லிம் பள்ளிவாசல் ஆகிய இடங்களில் சர்வமத வழிபாடுகள் நடத்தப்பட்டன.
ஆண்டு நிறைவு நாளில் 66 வது காலாட் படைபிரிவு தளபதியினை படைப்பிரிவின் ஊழியர்களால் அன்புடன் வரவேற்கப்பட்டதுடன் 20 வது இலங்கை இலேசாயுத காலாட் படைப்பிரிவு படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. தளபதி முகாம் வளாகத்தில் மரக்கன்று நாட்டுதல், குழு படம் எடுத்தல் என்பவற்றிலும் பங்குபற்றினார்.
படைப்பிரிவின் புதிய தளபதி படையினருக்கு உரையாற்றியதனை தொடர்ந்து அனைத்து நிலையினருக்குமான மதிய உணவுடன் நிகழ்வு நிறைவுபெற்றது.