16th December 2022 19:38:25 Hours
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படையினர் புதன்கிழமை (டிசம்பர் 14) முல்லைத்தீவில் தனது பதவிக் காலத்தை ஒரு வருடத்திற்கும் மேலாக நிறைவு செய்த முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க அவர்களுக்கு பிரியாவிடை மரியாதையினை வழங்கினர்.
வெளியேறும் தளபதியை முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக பிரிகேடியர் பொதுப்பணி பிரிகேடியர் சுரேஷ் பெரேரா அவர்கள் தலைமையக அதிகாரிகள் வரவேற்றதுடன் வாகன தொடர் அணிக்கு மரியாதையும் வழங்கப்பட்டது. பின்னர், அன்றைய பிரதம அதிதியை குழுபடம் எடுக்க அழைக்கப்படுவதற்கு முன்னர் படையினருக்கு உரையாற்றுகையில் அவர்கள் வழங்கிய ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார். இந் நிகழ்வில் முல்லைத்தீவு முன்னரங்க பராமரிப்புப் பகுதி தளபதி, 57, 59, 64, 66, மற்றும் 68 வது காலாட் படைபிரிவுகளின் தளபதிகள் கலந்து கொண்டனர்.
இந்த ஏற்பாட்டின் இறுதிப் பகுதியாக, வெளியேறும் முல்லைத்தீவு தளபதி அனைத்து நிலைகளுக்குமான தேநீர் விருந்துபசாரத்துடன் இணைந்துகொண்டார். பணிநிலை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் பிரதிநிதிகள் பல பாராட்டுச் சின்னங்களை வழங்கினர்.