16th December 2022 19:37:09 Hours
கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் வருடாந்தப் படைப்பிரிவுகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டியானது 10 ஓவர்கள் கொண்ட மென்பந்து கிரிக்கெட் போட்டியாக புதன்கிழமை (டிசம்பர் 14) மின்னேரியாவில் உள்ள இலங்கை பீரங்கி படையணி பயிற்சிப் பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் சிறப்பாகப் பயிற்றுவிக்கப்பட்ட 5 அணிகளின் பங்குபற்றலில் இடம்பெற்றது.
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ ஹெட்டியாராச்சி அவர்களின் வழிகாட்டுதலின் கீழும், கிழக்கு முன்னரங்க பராமரிப்புப் பகுதியின் தளபதி மேஜர் ஜெனரல் சானக மெத்தானந்தா அவர்களின் நெருக்கமான கண்காணிப்பின் கீழும் இந்தப் போட்டி நடைபெற்றது.
இறுதி போட்டியின் போது 23 வது காலாட் படைப்பிரிவு துடுப்பாட்ட வீரர்கள் 5 விக்கெட்டுகளை இழந்து 144 ஓட்டங்களை பெற்றதுடன் 22 வது காலாட் படைப்பிரிவு படையினரால் 8 விக்கெட்டுகளை இழந்து 68 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்து. அதன்படி 23 வது காலாட் படைப்பிரிவு வெற்றி பெற்ற அணியாக அறிவிக்கப்பட்டதுடன் 22 வது காலாட் படைப்பிரிவு இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டது.
பெருந்திரளான பார்வையாளர்களின் ஆரவாரத்திற்கு மத்தியில் கிழக்கு முன்னரங்க பராமரிப்புப் பகுதியின் தளபதி அவர்களால் வெற்றிக்கிண்ணங்கள் வழங்கப்பட்டன. 22, 23 மற்றும் 24 வது படைப்பிரிவுகளின் தளபதிகள், பிரிகேட் தளபதி, கட்டளை அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பார்வையாளர்களாக இருந்தனர்.
பின்வருவோர் சிறப்பு திறன்களுக்காக பரிசு கின்னங்களை பெற்றனர்.
சிறந்த பந்துவீச்சாளர்
பணிநிலை சார்ஜன் ஆர்ஏஜிசிகே கலஹீட்டியாகம – 23 வது படைப்பிரிவு
சிறந்த துடுப்பாட்டவீரர்
கோப்ரல் யுஎன்எஸ்எஸ் சசங்க - – 23 வது படைப்பிரிவு
சகலதுறை ஆட்டக்காரர்
கோப்ரல் யுஎன்எஸ்எஸ் சசங்க - – 23 வது படைப்பிரிவு