16th December 2022 20:05:40 Hours
15 வது இலங்கை பீரங்கி படையினர் சமூகம் நலம் சார்ந்த திட்டங்களின் ஒரு பகுதியாக மீகொட மாகாண ஆயுர்வேத வைத்தியசாலையின் டெங்கு அச்சுறுத்தல்களை எதிராக நிவர்த்தி செய்யும் முகமாக துப்புரவு செய்தனர்.
மேற்கு பாதுகாப்புப் படை தலைமையக தளபதி தளபதி மேஜர் ஜெனரல் தீபால் புஸ்ஸல்ல மற்றும் 142 வது காலாட் பிரிகேட்டின் தளபதி பிரிகேடியர் ரவீந்திர ஜயசிங்க ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதேநேரம், லெப்டினன் கேணல் டபிள்யூ.ஏ.எஸ்.எம்.விஜயலத் அவர்கள் பணியை உன்னிப்பாகக் கண்காணித்தார்.
மாகாண ஆயுர்வேத வைத்தியசாலையில் பணிப்பாளர் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க இத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.