Header

Sri Lanka Army

Defender of the Nation

16th December 2022 20:14:06 Hours

முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையகத்தின் புதிய தளபதி பதவியேற்பு

முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையக புதிய தளபதியாக இலங்கை சிங்க படையணியின் மேஜர் ஜெனரல் தர்ஷன விஜேசேகர அவர்கள் வியாழக்கிழமை (15) முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

அவருக்கு நுழைவாயிலில் 14 வது இலங்கை சிங்க படையணி படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதுடன் அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து, புதிதாக நியமிக்கப்பட்ட முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையக தளபதி 'பிரித்' பாரயணங்களுக்கு மத்தியில் உத்தியோகபூர்வ ஆவணத்தில் தனது கையொப்பத்தை பதிவிட்டு பதவியினை ஏற்றுக்கொண்டார்.

சம்பிரதாயங்களுக்கு அமைவாக, மேஜர் ஜெனரல் தர்ஷன விஜேசேகர அவர்கள் மரக்கன்று ஒன்றை நாட்டியதுடன் படையினருக்கு உரையாற்றினார். படையினருடனான உரையின் போது அனைவரையும் அர்ப்பணிப்புடன் பணியாற்றுமாறு அவர் வலியுறுத்தியதுடன் தனது முன்னேக்கு பார்வையினை முன்வைத்தார்.

57, 59, 64 மற்றும் 68 வது படைப்பிரிவுகளின் தளபதிகள், பிரிகேட் தளபதிகள், பணிநிலை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் புதிய முல்லைத்தீவு தளபதியை வாழ்த்துவதற்காக அங்கு வருகைத்தந்திருந்தனர்.

தற்போது இலங்கை இராணுவ தொண்டர் படையணி தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க அவர்களுக்கு பதிலாக இவர் பதவியேற்றுள்ளார்.