16th December 2022 20:07:20 Hours
குருவிட்ட கெமுனு ஹேவா படையணியில் உள்ள கெமுனு ஹேவா படையினரால், பெல்மடுல்ல, கல்பொத்தவளையில் இருந்து நினைவுப் பேழை, 'சுமண சமன்' கடவுளின் சிலை மற்றும் அனைத்து புனித ஆபரணங்களையும் எடுத்துச் செல்வதற்கு உதவியதன் மூலம் சிவனொலிபாத யாத்திரைக்கு யாத்ரீகர்களின் பருவத்தின் தொடக்கத்திற்கு பங்களிப்பு வழங்கியதையடுத்து ரஜ மஹா விகாரை மற்றும் பாலபத்தல புராதன விகாரை வரை சென்று பின்னர் டிசம்பர் 7-8 ம் திகதிகளில் சிவனொலிபாத மலை உச்சியில் உள்ள மகா மண்டபத்திற்கு எடுத்து சென்றனர்.
மார்கழி பௌர்ணமி தினத்தன்று புனிதப் பொருட்களுடன் சம்பிரதாய உடையணிந்த கெமுனு ஹேவா படையினர் சிவனொலிபாத யாத்திரையில் கடந்த சில ஆண்டுகளாக ஶ்ரீ பாத விகாரையின் விகாராதிபதி மற்றும் மாவட்ட செயலகத்தினரின் அழைப்பின் பேரில் உதவி வருகின்றனர்.
இரத்தினபுரியில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.