Header

Sri Lanka Army

Defender of the Nation

12th December 2022 14:09:41 Hours

இராணுவ போர் பயிற்சி பாடசாலையில் 191 சிப்பாய்கள் பயிற்றுவிப்பாளர்களாக தகுதி

'பயிற்றுவிப்பாளர் பாடநெறி' மூலம் இராணுவத்தில் திறமையான பயிற்றுவிப்பாளர்களாக இராணுவ வீரர்களை வளர்க்கும் அம்பாறை போர் பயிற்சி பாடசாலையில் 191 சிப்பாய்களை பயிற்றுவிப்பாளர்களாக தகுதிப்படுத்தி அவர்களுக்கு சான்றிதழ்களை வியாழக்கிழமை (டிசம்பர் 8) வழங்கப்பட்டது.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் வழங்கிய வழிகாட்டுதல்களின்படி, புதிய சிப்பாய்கள் மற்றும் சக வீரர்களுக்கு பல்வேறு பாடநெறிகளை நடத்தும் வீரர்களின் தொழில்முறை தரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் பயிற்றுவிப்பாளர்களாகப் பயிற்சி பெறுவதற்கு உள்வாங்கப்பட்ட எண்ணிக்கையை அம்பாறை போர் பயிற்சி பாடசாலைஅதிகரித்தது.

18 நாட்களுக்கு நடாத்தப்பட்ட பாடநெறி - இல 61, நவம்பர் 21 அன்று தொடங்கி டிசம்பர் 08 அன்று முடிவடைந்தது. அம்பாறை போர் பயிற்சி பாடசாலையின் தளபதி பிரிகேடியர் ருவன் முனிபுர அவர்களின் நிறைவுரையுடன் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு வியாழக்கிழமை (டிசம்பர் 08) சிரேஷ்ட பயிற்றுனர்கள் மற்றும் போர் பயிற்சி பாடசாலையின் அதிகாரிகள் முன்னிலையில் இடம்பெற்றது.

பாடநெறியில் கலந்து கொண்ட 191 சி்ப்பாய்களில், தகுதி அடிப்படையில் அதிக பள்ளிகளை பெற்ற கீழ்காணும் சிப்பாய் பெற்றுக் கொண்டார். விருது வழங்கும் விழாவில் அவருக்கு கிண்ணங்களும் தனி சிறப்பு சான்றிதழும் வழங்கப்பட்டது:

கோப்ரல் டிஎம் சுனில் சாந்த – 7 வது இலங்கை சிங்கப் படையணி