12th December 2022 15:01:17 Hours
இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் பிரிகேடியர் நளின் ஜயவர்தன அவர்கள் 66 வது காலாட் படைபிரிவின் 12 வது தளபதியாக புதன்கிழமை (டிசம்பர் 07) பூநகரின் படைப்பிரிவுத் தலைமையகத்தில் சமய ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் கடமைகளை பொறுப்பேற்றார்.
வருகை தந்த புதிய தளபதியை பணிநிலை அதிகாரிகளால் அன்புடன் வரவேற்கப்பட்டதுடன், முகாம் வளாகத்தின் நுழைவாயிலில் 20 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது.
பிரிகேடியர் நளின் ஜயவர்தன அவர்கள், மகா சங்க உறுப்பினர்களின் 'செத்பிரித்' பராயணங்களுக்கு மத்தியில், தனது கடமைகளை பொறுப்பேற்றதன் அடையாளமாக உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டார். அத்துடன் அனைத்து படையினர்களுக்கும் உரையாற்றியதுடன் தனது வருகையின் நினைவாக முகாம் வளாகத்தில் மரக்கன்றினை நடுவதற்கும் தளபதி அழைக்கப்பட்டார். இந்த நிகழ்வின் போது பணிநிலை அதிகாரிகள் மற்றும் சிப்பாய் உடனிருந்தனர்.
இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் ஜனக பிரியதர்ஷன அவர்களுக்கு பதிலாக இவர் இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.